Posted on Leave a comment

அஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்

(புகைப்படம் நன்றி: India Today)

23
வயது. வழக்கறிஞர் படிப்பில் துடிப்புடன், அதுவும் தில்லியில், மேல் தட்டு பஞ்சாபி குடும்பத்தில்
பிறந்த, திரைப்பட நடிகர் போல் தோற்றம் கொண்ட ஒரு இளைஞனின் சிந்தனை எப்படி இருக்கும்?
தொழில் முறையில் எப்படி வளர்வோம், சமுதாயத்தில் தன்னுடைய அந்தஸ்தை கார், பங்களா, பெண்கள்
என்று எப்படி படாடோபமாக வெளிப்படுத்துவது என்றுதானே இருக்கும்? ஆனால் அந்த இளைஞன் அருண்
ஜெயிட்லி ஆக இருந் ததால்… அவசர நிலை மிசா பிரகடனத்தை எப்படி எதிர்ப்பது என்ற தேசிய
சிந்தனை இருந்தது. பிரதமர் இந்திராவின் கொடும்பாவியை எரிக்கும் துணிவும் இருந்தது.
ஏபிவிபி
செயலாளராக இருந்த அருண், தன் அரசியல் வாழ்க்கையின் முதல் படியில், நானாஜி தேஷ்முக்,
வாஜ்பாய், அத்வானி போன்ற, நாட்டின் பெரும்தலைவர்களுடன் 19 மாதம் சிறையில் கழித்தார்
(1975-1977). என்று, எப்படி, எவ்வாறு பொழுது புலரும் என்று தெரியாத, இந்திய சரித்திரத்தின்
கருப்பு நாட்கள் அவை. மற்ற சாதாரண இளைஞர்களின் நம்பிக்கையை அந்தச் சிறைவாசம் உடைத்திருக்கும்.
அருண்
ஜி, லோக் நாயக் ஜெ.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்தார்.
அரசியல் ஜெயிட்லி
1977ல்
ஜன சங்கம், பின்னர் 1990 முதல் பாஜக நிர்வாகக் குழுவில் உறுப்பினராக செயல்படத் துவங்கினார்.
இருப்பினும் இவர் மக்களவைத் தேர்தலில் 2014ல் மட்டுமே போட்டியிட்டார். 2014ல் பாராளுமன்றத்
தேர்தலில் காப்டன் அமரீந்தர் சிங்கிடம் தோல்வி. இது சிறிய பின்னடைவாக ஆனது சற்று வருத்தம்
அளிக்கும் விஷயம். ராஜ்ய சபை உறுப்பினராகவே, தன் அரசியல், அமைச்சகப் பணியினைத் தொடர்ந்தார்.
வழக்கறிஞர் ஜெயிட்லி
1989ல்
வி.பி.சிங் இவரை கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் ஆக்கினார். போபோர்ஸ் ஊழல் வழக்கிற்குத்
தேவையான தகவல்களைத் திரட்டும் பொறுப்பு அருண் ஜிக்கு வழங்கப்பட்டது. ஒரு சுப்ரீம் கோர்ட்
வக்கீலாக அருண் ஜீயின் கட்சிக்காரர்கள், பெப்சி, கோக் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்!
அத்வானி, ஷரத் யாதவ், சிந்தியா போன்ற பெரும் அரசியல்வாதிகள். தொழில் முறையில், அருண்
ஜி, இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
அமைச்சர் ஜெயிட்லி
உலக
வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), சட்ட விரோதமான கறுப்புப் பணச்
சலவை எதிர்ப்பு (AML) போன்றவற்றில் அருண் ஜியின் பெரும் உழைப்பை நாடு பெற்றிருக்கிறது.
தகவல்,
தொலைத் தொடர்பு, சட்டம், அரசின் முதலீடு துறப்பு, கப்பல்துறை, நிதி, உள்துறை என்று
அருண் ஜியின் கைவண்ணம் கண்ட அமைச்சகங்கள் பல. ஆனால் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய
நிதிச் சீர்திருத்தங்களான, டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி, IBC எனப்படும் நொடித்து முதலீடு
இழந்த கம்பெனிகளை சரிவர மூடி, கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் காப்பாற்றும் திட்டம், அருண்
ஜி நிதி அமைச்சராக இருக்கையில் நிறைவேறின. இவற்றைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மிகப்
பெரும் துணிச்சல் தேவை. அந்தத் துணிவு, அருண் ஜி கொடுத்த நம்பிக்கையால் நரேந்திர மோதி
அரசிடம் இருந்தது. அரசியல் வாதிகளிடமிருந்து, இலவசத்தை மட்டுமே பார்த்திருந்த இந்தியாவில்,
இந்தத் திட்டங்களும், எரிவாயு மானியக் குறைப்பும், இந்த அரசுக்கு அதன் நேர்மை கொடுத்த
துணிவு.
நண்பர் ஜெயிட்லி
2002.
கொடூரமாக நிகழ்த்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பிற்கு எதிர்வினையாக, குஜராத்தில் வன்முறை
வெடித்தது. காங்கிரஸ் தயவில் வாழ்கின்ற இந்திய ஊடகங்கள், தங்கள் வெறுப்பினைக் குவித்து,
நரேந்திர மோதி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின. செக்யூலர் விஷத்தில் தீண்டப்பட்டு,
கட்சியிலேயே, குறைவான நபர்கள் மட்டுமே மோதி ஜிக்கு ஆதரவாக இருந்தார்கள். உண்மை ஏறத்தாழ
சிறு நூலிழையில் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது. அப்போது அருண் ஜியின் மோதி ஆதரவுப் பேச்சு
உண்மைக்கு சுவாசம் தந்தது. பிரதமர் வாஜ்பாய் அனுமதியுடன், மோதி அரசு குஜராத்தில் தொடர்ந்தது.
ஒரு
நல்ல திறமையான வழக்கறிஞராக, பத்திரிகைகளின் பொய் ஒப்பனை விலக்கி, உண்மை நிலவரத்தைப்
புரிந்து கொள்ளவும், அதைத் தெளிவுற சபையில் எடுத்துச் சொல்லவும் அருண் ஜிக்குத் தெரிந்திருந்தது.
அந்த சம்பவம் மோதி ஜி – அருண் ஜி இருவருக்கும் இடையில் ஒரு நட்புப் பிணைப்பை உருவாக்கியது.
அந்த நட்பின் நற்பயனை, இந்நாடு பின்னாளில் அடைந்தது.
மனிதர் ஜெயிட்லி
குற்றமற்றவர்கள்,
குறை சொல்ல முடியாதவர்கள் யார்? சிதம்பரம் போன்ற, காங்கிரசின் சில முக்கியத் தலைவர்களுடன்
இவருக்கிருந்த தனிப்பட்ட நட்பினால், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் சுணக்கம்
ஏற்பட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு.
ஆனால்
குஜராத்தில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, முற்றிலும் புதிய சூழலில், அதுவும்,
கயமை நிறைந்த, நுனி நாக்கு ஆங்கிலமும், வன்மமும் நிறைந்த லுட்யன்கள் / கான் மார்க்கெட்
இருட்டுக் கனவான்களை சமாளித்ததில் அருண் ஜெயிட்லியின் பங்கு மகத்தானது. இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் போல் அருண் ஜி செயல்பட்டார்.
நாடு
ஒரு திறமையான வழக்கறிஞரை, அவரது குடும்பம் குடும்பத் தலைவனை, பாரதீய ஜனதா கட்சி ஒரு
உன்னதமான தலைவரை இழந்து சோகத்தில் தவிக்கிறது.

போய் வாருங்கள் அருண் ஜி.
பாரதீயத்தின் விதைகள், விழுதுகளாக உயிர்த்து, பாரதம் இன்று பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.
உங்கள் உழைப்பால் கிட்டிய பயனை, இந்த தேசம் மறவாது நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கும். 

Leave a Reply